Followers

Thursday 19 April 2012


BEFORE THEY WERE MOTHERS

Before they were mothers
Leto ans Niobe
had been the most
devoted of friends
Sappho




SLEEP,DARLING
             
Sleep darling
I have a small
daughter called
Cleis, who is
like a golden 
flower
I wouldn't 
take all croesus'
kingdom with love 
thrown in, for her 
Don't ask me what to wear
I have no embroidered 
headband from Sardis to 
give you, Cleis, such as 
I wore 
and my mother 
always said that in her 
day a purple ribbon 
looped in the hair was thought 
to be high style indeed 
but we wer dark: 
a girl 
whose hair is yellower than 
torchlight should wear no 
headdress but fresh flowers
Sappho


இந்த கவிதைகளில் தளும்பும் உணர்வுகளை பார்த்தீர்களா? ஆயிரமாண்டுகளுக்கு முன்பும் 
பெண்களின் நட்பு வட்டம் சிறிதாக தான் இருந்திருக்கிறது. 
நாம் பேசிக்கொண்ட நேரங்களில் எப்பொழுதோ 
நீங்கள் சொன்ன தனிமையை சாப்போவின் கவிதைகளில் நிறைந்திருக்கும் தனிமையுடன் சேர்த்து பார்க்கிறேன். 
இப்போதும் தனிமை திணிக்கப்படுகின்ற கலாச்சாரமாக 
பெண்களுக்கு ஒரு துளி கூட மாறாமல் அப்படியே.
 நம் அப்பாவும் அண்ணனும் தனிமை தேடினார்கள். 
அது அவர்களுக்கு ஆற்றலை திரும்ப பெறுவதற்கான தீர்வாக..
நாம் அதற்குள்ளேயே வாழ்ந்தும் ஆற்றலை இழந்துக்கொண்டே ..
அது கட்டாயமாக்கப்பட்டது.  
நண்பர்களை விட்டு தொலைவில் ,
பெற்றோர்களை விட்டு தொலைவில் ,
பிறகு கணவனை அலுத்து போகும் நாட்களில் 
உணர்வுகளிலிருந்தும் தொலைவில், 
குழந்தைகளுக்கு நம்மை புரியாமல் போகும் வயதில் 
பு றத்தின் கற்பனைகளிலிருந்தும் தொலைவில் ... 
தனிமை , தனிமை , 
பல நேரங்களிலும் வேதனையின் உருமாற்றமாக தனிமை ...

Tuesday 17 April 2012

மங்கையர்கரசியார்

மங்கையர்கரசியார் ,.பாண்டிய மன்னனின் மனைவி, சமண மதத்தினரால் அரசனுக்கும் நாட்டுக்கும் ஏற்பட்ட துன்பங்களிலிருந்தும் மீட்க எடுத்த சில முயற்சிகளை நாயன்மார் கதைகளில் படித்தேன். அவரை பற்றி பரவலாக பேசப்படவில்லை. அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் தோழரே .. சாவித்ரியும் சீதையும் கண்ணகியும் பெண்களின் ஒழுக்கத்திற்கு ஒற்றை மூலியாக வலம் வரும் போதும் இவரை போன்றவர்கள் ஏன் மறைந்திருக்கிறார்கள் ? 

பர்லக்ஸ் நடனக்கலை

<iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/f8YIrepnJy0" frameborder="0" allowfullscreen></iframe>



இது நம்ம ஊரு கரகாட்டம்/ரெகார்ட் டான்ஸ் மாதிரியா?
நம்ம ஊரு டான்ஸ்களையும் கொஞ்சம் இந்த மாதிரி புரமோட்
பண்ணக் கூடாதா?  -மாதவி.

மீரா:
தோழீ, இது நம்ம ஊரு ஆட்டங்கள் மாதிரி கிடையாது. இது பிரெஞ்சு மூலம் வந்த ஒரு அருமையான மேடை கலை. கவிதைகளுக்கும் இலக்கிய எழுத்துக்களுக்கும் ஆன உடல் மொழியாக தொடங்கிய இந்த கலை பிறகு நகைச்சுவை கலர்ந்து மேடையில் வந்தது. ஒரு கேரிகேச்சர் ஆக. சமூகத்தின் பலபல பிரச்சினைகளும் பாரடிகளாக(Parody ) இப்படி வந்திருக்கிறது.   சில்விய பிளாத்தின் கவிதைகள் கூட இந்த பர்லஸ்கு நடன கலை வழியாக மேடையில் அரேங்கேறியிருக்கிறது.  மட்டுமல்ல. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதிகளில் எப்பொழுதோ இந்த கலை அமெரிக்காவில் தடை செய்யப்பபட்டது குறிப்பிடத்தக்கது.  பிறகு பெண்ணுடலை கொண்டாடும் ஒரு கவிதை காட்சியாக இது மெருக்கேறி உலாவருகிறது.  "உறுப்புக்கள் ஒவ்வொன்றும் அழகானவை. அவையில் உணர்வுகள் படியும்போது அவை பேசுகிறது. கொஞ்சுகிறது நடனம் ஆடுகிறது. அழுகிறது. சிரிக்கிறது.. இது தான் பெண்ணுடல். உங்களை பேணுபவளும் காதலிப்பவளும் காமிப்பவளும் ஆன பெண் இந்த உறுப்புக்கள் வழியாக தான் ஆன்மாவை உங்கள் முன் வைக்கிறாள் .  அதை சிதைக்காதீர்கள் "என்ற  அழுத்தமான கருத்துடன் மேடையேறிய ஆயிரக்கணக்கான   பர்லஸ்கு நடன கலைஞர்கள் மேற்கத்திய நாடுகளில் எங்கும் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். 

உடலில் இருந்தும் ஆடைகளை களைந்து இறுக்கமல்லாத  ஒரு மனநிலையில் அந்த பெண்கள் ஆடி உணரவைக்கிறார்கள். அருமையான ஒரு கருத்து. இல்லையா. 

நம்மூர் பண்பாட்டு கலைக்கும் இதற்கும் ரொம்ப தூரம்.  சில விஷயங்களில் வெள்ளையர்கள் நம்மை விட அறிவார்ந்தவர்கள். பல பொழுதும்  அவர்கள் பரிணாம ஏணியில் நம்மை விட ஒரு படி மேலே இருக்கிறார்கள் என்பது உண்மை என்று கூட தோன்றுகிறது. ... 

மீரா